Saturday, 11th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராசிபுரத்தில் மாநில அளவிலான யோகாசன போட்டிகள் சேலம் மாவட்டத்திற்கு சாம்பியன் பட்டம்

பிப்ரவரி 27, 2023 12:13

ராசிபுரம் : நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மாநில அளவிலான யோகாசன போட்டிகள்  நடைபெற்றது. ராசிபுரம் ஸ்ரீஆஸ்ரம் யோகா பயிற்சி மையம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில் சேலம், நாமக்கல், கரூர், மதுரை, ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ மாணவியர்கள் பலர் பங்கேற்றனர். வயது அடிப்படையில்  முன்வளைதல், பின் வளைதல், சமநிலைப்படுத்துதல், திருகுநிலை போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. 


ஸ்ரீஆஸ்ரம் யோகா பயிற்சி மையத் தலைமை பயிற்சியாளர் வி.சரவணன் தலைமை வகித்தார். இதில் ராசிபுரம் எஸ்.ஆர்.வி பள்ளிகளின் செயலர் பி.சுவாமிநாதன், ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி செயலர் வி.சுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தனர். நடைபெற்ற போட்டிகளில் சேலம் மாவட்டம் சார்பில் பயிற்சியாளர் ராஜகுமார் தலைமையில் பங்கேற்ற சேலம் மாவட்ட அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது. 


மேலும் 9 வயது முதல் 10 வயதுடையோருக்கான போட்டியில் ஆடவர் பிரிவில் வி.ரித்தஷ், மகளிர் பிரிவில் எஸ்.பிருத்திகா ஆகியோரும், 11 வயது முதல் 12 வரையிலான போட்டியில் ஆடவர்பிரிவில் பி.யத்தீஸ்வரன், மகளிர் பிரிவில் பி.அனன்யா, 13 வயது முதல் 14 வரையிலானோருக்கான போட்டியில் ஆடவர் பிரிவில் கே.சுதர்ஷன், மகளிர் பிரிவில் சபியா தஷ்னீம் ஆகியோரும் முதலிடம் பிடித்து பரிசு பெற்றனர்.

தலைப்புச்செய்திகள்